நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ மற்றும் எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப சாளரத்தை பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை திறந்திருக்கும் எனவும் இந்த குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் படி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்த பின்னர் இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.