விஜயவாடா கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருப்பதி செல்லும் ரயில் சேவையில் அக்டோபர் 30 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி – காட்பாடி பயணிகள் ரயில், காட்பாடி – ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில், அரக்கோணம் – கடப்பா மெமு விரைவு ரயில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.

சென்னை சென்ட்ரல் மற்றும் பித்ரகுண்டா இடையே இயக்கப்படும் விரைவு ரயில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப் போலவே விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் இன்று முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். மறு மார்க்கமாக திருப்பதியில் இருந்து புறப்படுவதற்கு பதில் இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.