உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் 88 கோடி செலவில் 1001 தையல் இயந்திரங்களை பெண்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இதனைத் தவிர இளைஞர்களுக்கு UPSC, PCS, CDA, CDA உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பாஜக வாக்குறுதி படி ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் எனவும் எப்போது உயர்த்தப்படும் என்பது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.