தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருவதால் பக்தர்களின் வசதிக்காக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று முதல் வரும் மூன்று நாட்களுக்கு திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனைப் போலவே தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.