உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள பாக்., – ஆப்கான்.. இடையிலான போட்டியை காணவரும் ரசிகர்கள், இப்போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால், மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.