தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற மெனுவை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிராக இருக்கும் குறியீடை கிளிக் செய்து Scholarship என்பதை திறந்து உதவித்தொகை குறித்த விவரங்களை சரிபார்த்து தேவையான சாதி சான்றிதழ் எண் மற்றும் வருமானவரி சான்றிதழ் என் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகளை வருகின்ற நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.