பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டாபிராம் மிலிட்டரி டிசைனிங் – ஆவடி இடையே இரவு 11:55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஜனவரி 28,29 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் வேளச்சேரி – பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஜனவரி 28-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அதற்கு பதிலாக வேளச்சேரி – ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஜனவரி 29-ஆம் தேதி சென்னை கடற்கரை- பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே இரவு 11:15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் ஜனவரி 28,29 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக இரவு 11.50 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் ஜனவரி 28,29 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் – ஆவடி இடையே இரவு 11:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் – ஆவடி இடையே இரவு 11:55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.