தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்.எம்.சி மாற்றியமைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பள்ளிகளில் எஸ்.எம்.சி கூட்டம் மாதம் தோறும் இறுதி வெள்ளிக்கிழமை நடத்த பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிற நிலையில் எஸ்.எம்.சி கூட்டம் மாதம்தோறும் முதல் வாரத்திலேயே நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் எஸ்.எம்.சி கூட்டம் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இனி மாதம் தோறும் இந்த நடைமுறை தொடரும். அதற்கு தகுந்தார் போல் ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை செயல் ஆசிரியர்கள் செய்து கொள்ள வேண்டும். இது குறித்து முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாகவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.