ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக ஆவண பதிவு நடைபெறும் என்பதால் குறைந்தபட்சம் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் இதுபோல நடப்பது வழக்கமான ஒன்றுதான்.