மதுரையில் அதிமுக சார்பாக நேற்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்ற நிலையில் அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து கட்சி லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை மாநாட்டில் கூட்டமே இல்லை, சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை, இபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளையே சந்தித்து வருகின்றது. மக்களவை தேர்தலில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தி அதிமுக வரலாற்றை மீட்டெடுப்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்