திருவண்ணாமலையில் அரபி ஆசிரியை ஷபானா ஹிஜாப் அணிந்தபடி நேற்று இந்தி தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஹிஜாபை கழற்ற தேர்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஹிஜாபை கழற்ற மறுப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஹிஜாப் பிரச்சனை வந்துள்ளதால் இணையத்தில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து டீசல்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்