இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பா ரஞ்சித் பேசுகையில் ரொம்ப முக்கியமான நாள் இன்று. நம் வீட்டில் கற்பூரம் கொளுத்த வில்லை என்றால் நாம் தீவிரவாதிகள் தான்.

ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது. இத்தகைய சூழலில் நமது மனங்களை பண்படுத்தவும், மூளையில் ஏற்றி வைத்துள்ள பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிப்பதற்கும் நம்மிடம் இருக்கும் ‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்.

மக்களை எளிதில் அடையும் ஆயுதமாக ‘கலை’ இருப்பதால், மக்கள் மனங்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நான் நம்புகிறேன் என பேசியுள்ளார்.