புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது .இந்த தினத்தில்  அனைவருடைய வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது.  நாடும் முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள்.

மேலும் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முன்னணி நடிகையும் நடன கலைஞருமான சுகன்யா ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை எழுதிய இசை அமைத்து பாடியிருக்கிறார். பக்தி பரவசம் பரவும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாடும் விதமாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.