அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பிரான்சிஸ்கோ நோக்கி அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 84 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில்  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமான இன்ஜினை அணைக்க முயற்சித்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட விமானி போர் லேண்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஜோசப் டேவிட் எமர்சன் என்ற அவர் ஒரு விமானி என்பது தெரியவந்தது. அவர் இவ்வாறு செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.