கனடாவில் உள்ள சால்ட் மேரி பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் காவல்துறையினருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு இன்னொரு நபர் இறந்து கிடந்தார்.

அவருடன் 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடலும் கிடந்துள்ளது. அடுத்ததாக இன்னொருவரின் சடலமும் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பது போல் தெரிவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.