ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. நேற்று இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 74 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகையில் இஸ்ரேல் காசா மீது மேற்கொண்ட இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் என்பது இந்த தாக்குதலில் தான் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் நான் இருக்கும் அதிகமான ஹமாஸ் இலக்குகளை தாக்கி பல ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் போர் தொடங்கி இதுவரை இஸ்ரேலின் தாக்குதலினால் 2360 குழந்தைகள் உட்பட 5791 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.