டிஎன்பிசி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது.

எனவே, AI Automation எனப்படும் புதிய உயர் தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கால தாமதமின்றி தேர்வு முடிவுகளை வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.