தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிக அளவு வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அந்த நாட்களில் காரைக்கால் பகுதிகளில் காலை 10  மணி மூன்று மணி வரை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.