ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஐம்பதாயிரம் ரூபாயாக இருந்தது. படிவம் 68j ஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவ சிகிச்சைக்காக முன்பணம் கோரலாம்.