தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் அரசு அறிவித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் கூடுதலாக அனுபவிக்கும் எண்ணத்தில் பலரும் ஒரே குடும்பத்தில் இருந்து புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து வாங்கி வருகிறார்கள்.

அதன்படி புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து தனி சமையலறையுடன் வசிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் விண்ணப்பம் பெற்றவர்களின் முகவரிகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் இரண்டு சமையலறைகள் உள்ளதா மற்றும் இரண்டு அடுப்புகள் உள்ளதா என்று சோதித்து அதன் பிறகு ரேஷன் கார்டுகளை பரிசீலனை செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.