கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டா பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவருடைய மனைவி மாதம்மாள் (50). கூலித்தொழிலாளியாக உள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி தோசை சுட்டுத் தர முடியாது என மனைவி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த மருமகள், குழந்தை ஆகியோரையும் வெட்டியதால் 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மாதம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.