கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் மேஸ்திரியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார். இந்த தம்பதியினரின் இளைய மகள் தமயந்தி(19) தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் தமயந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தமயந்தியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு அதே ஊரில் வசிக்கும் ஸ்ரீநாத் என்பவர் மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரீநாத்தை கைது செய்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.