கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை கட்டியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் வரிசையில் நின்று சென்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றத்தை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகமாக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.