சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய அறிவிப்புகளை சென்னை மேயர் பிரியா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடந்தோறும் ஆண்டு விழா நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.