திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.