மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வருவது, பணிக்கு வராமல் இருப்பது போன்ற செயல்களை தடுக்க பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.