இந்தியாவில் தயராகும் முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர், “குஜராத்தில், இந்தியாவில் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொழிற்சாலை, 2024 இறுதியில் செயல்பட தொடங்கும். மேலும், 4-5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் ஓராண்டுக்குள் அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி செமி கண்டக்டர் நிறுவனமானது செமி கண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஒப்பந்தத்தை இந்தியாவோடு செய்து கொண்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் குஜராத்தில் 8.25 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலையை மைக்ரான் நிறுவனம் அமைத்து வருகிறது. இது இந்தியாவில் அமைக்கப்படும் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை ஆகும்.