இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த ஜோஸிமோல் பி ஜோஸ் என்பவருக்கு விரல்கள் இல்லாததால் ஆதார் அட்டை பெற முடியவில்லை.

இந்த தகவல் மத்திய அமைச்சர் ராஜூவ் சந்திரசேகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அந்த பெண்ணின் இருப்பிடத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆதார் அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கைரேகை இல்லாமலும் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.