அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக குடும்ப கட்சி கிடையாது. மக்களுக்காக உழைக்கும் கட்சி.

குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த உடனேயே சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.