பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி எச்சரித்துள்ளது. மேலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அந்த கணக்குகள் ஒரு மாதத்திற்குள்ளாக மூடப்படும் இடமும் அந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.