தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி இன்று காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ள நிலையில் அனைத்து விதமான கல்வித் தகுதி கொண்டவர்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.