காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள நலன் குளத்தில் அங்குள்ள யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களுடைய தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கம். குறிப்பாக சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இந்த கோயிலில் வருடம் தோறும் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநள்ளாறு நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.