வங்காளதேசத்தின் பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் துங்கை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் கடந்த வியாழன் அன்று நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் உடைந்துள்ளார். கோவிலுக்குள் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

சிலைகள் உடைந்து கிடப்பதை பார்த்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொண்டதில் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது கலீல் மியா என்பவர் தான் என கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.