ரஷ்யாவைச் சேர்ந்தவர் மைக்கேல் (40). இவர் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, தூங்கும் போது கனவுகளை கட்டுப்படுத்த மூளையில் சிப் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். மருத்துவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளார். ஆனால் அவரின் இந்த முடிவுக்கு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து மைக்கேல் டிரில்லிங் இயந்திரம் மூலம் தலையில் துளையிட்டு, எலக்ட்ரோட் சிப்பை தாமாக பொருத்தியுள்ளார்.

இதனால் அவர் தலையில் இருந்து அதிக அளவில் இரத்தம் வெளிவந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து அவரின் உயிரை காப்பாற்றினர்.