விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தலை நகரில் திரளஉள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி டெல்லிக்குள் நுழைவதை தடுக்க இரும்பு, கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டிராக்டர் பேரணியை போலீஸ் தடுத்தால் கார், பேருந்து மற்றும் ரயில் மூலம் டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டம் போல மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்க உள்ளது.