உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டாவாவில் உள்ள ராம்லீலா சாலையில், சாலைப் பணிகளுக்காகக் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் மற்றும் கற்களால் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இரவு நேரத்தில் தனது பைக்கில் சென்ற நபர் ஒருவர், சாலையில் சிதறிக் கிடந்த மண்ணில் சறுக்கி நிலைதடுமாறி விழுந்தார். அதே நேரத்தில் எதிரே வந்த ஒரு எஸ்யூவி காரின் சக்கரங்களுக்கு மிக அருகாமையில் அந்த பைக் சறுக்கிச் சென்றது. நூலிழையில் கார் மோதாமல் தப்பியதால், அந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்தத் திகிலூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A horrific accident occurred on #RamlilaRoad in #Etawah after loose soil was left scattered across the roadway, putting innocent lives at serious risk.
Locals claim the tragedy resulted from complete negligence on the part of the municipal authorities. Despite repeated warnings… pic.twitter.com/bruH4IgQev
— Hate Detector 🔍 (@HateDetectors) February 23, 2026
இந்த விபத்திற்கு நகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலைப் பணிகளை முடித்த பிறகு, மீதமுள்ள மண்ணை அகற்றாமலும், அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்காமலும் விட்டதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று மக்கள் கொதிப்படைந்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்போது ஒரு உயிர் போகும் நிலைக்குச் சென்ற பின்னராவது அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
