முதுநிலை நீட் மதிப்பெண் விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ‘0’ Percentile இருந்தால் போதும் என்ற 21ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இம்முடிவை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இளநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த மன வலியைத் தருகிறது” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.