மராட்டியம் நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி இன்று(ஜன,.29) இண்டிகோ விமானமானது புறப்பட்டது. இதையடுத்து விமானம் மும்பை ஏர்போர்ட் அருகில் வந்தபோது ஒரு பயணி விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சி செய்தார். அவசரகால கதவை திறப்பதற்குரிய பகுதி கவர் வாயிலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கவரை விலக்கி கதவை திறக்க அந்த பயணி முயற்சித்தார்.

இதை பார்த்த விமான ஊழியர்கள் உடனே கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். அதோடு துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். அதன்பின் விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரை இறங்கியது. இச்சம்பவம் தொடர்பாக விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சித்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.