மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் அடங்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ,11, 833 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.