மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் அடங்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ,11, 833 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!
Related Posts
இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read moreமக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more