2024 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மார்ச் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.