பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி. எம்எல்ஏவாக தொடர்வதை அடுத்து மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி காலி என்கிற அறிவிப்பை ரத்து செய்வதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் பொன்முடி. பொன்முடியை மீண்டும் நியமிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாளைக்குள் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் மூலம் உறுதியானது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி.