புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி மூன்றாம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.