அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு, இந்த விடுமுறை அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு நிறுவனங்கள் எதுவும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.