தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.