புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வாயுகசிவை நிறுத்த போராடி வருகின்றனர்.

இந்த வாயு கசிவு காரணமாக அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு திடீரென கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனை ஏற்பட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அமோனியா வாயுக் கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.