சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் புதுடெல்லியை சேர்ந்தவர்.

சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி நகர முதல் காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார். தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.