கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினர் தீவிரவாதிகள் போன்று வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் நடந்து வருகிறது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டு உள்ளனர்.