ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.