இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டையை பாதுகாப்பதற்காக PVC ஆதார் கார்டை UIDAI அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதனை ஆன்லைனில் எப்படி பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PVC ஆதார் கார்டு பெற முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது mAadhaar ஆப் ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
பிறகு  virtual id அல்லது ஆதார் நம்பரை பதிவிட்டு ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
பின்னர்  உங்கள் மொபைலுக்கு ஒரு OTP பதிவு செய்து அட்ரஸ் விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இங்கு நீங்கள் பிவிசி கார்டு பெற ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் முடிந்த பின் நீங்கள் உங்கள் பிவிசி ஆர்டர் ஐ mAadhaar அல்லது UIDAI இணையதளம் மூலமாக ட்ராக் செய்ய முடியும். அதன்பின் 15 நாட்களுக்குள் உங்கள் PVC கார்டு டெலிவரி செய்யப்படும்.